புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உடையார்பட்டி கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். அவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த சந்தோஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாடாலூர் காரை பிரிவு ரோடு அருகே சென்றபோது சாலையை கடக்க முயன்ற குமார் மீது சந்தோஷ்குமாரின் இருசக்கர வாகனம் மோதியது.

இந்த விபத்தில் குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதில் படுகாயமடைந்த சந்தோஷ்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.