திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் கருப்பசாமி என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் கருப்பசாமி மீது மோதுவது போல சென்றனர். இதனால் கருப்பசாமி பார்த்து போகுமாறு அவர்களை கண்டித்துள்ளார். இதனையடுத்து கருப்பசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு டீ கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 5 வாலிபர்கள் கருப்பசாமியை இரும்பு கரண்டியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த கருப்பசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே பொதுமக்கள் ஒரு வாலிபரை மட்டும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாயா ராஜன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபர்கள் ரஞ்சித், சரவணன், சபரி, முத்துமணி என்பது தெரியவந்தது. கஞ்சா போதையில் 5 பேரும் கருப்பசாமியை தாக்கியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.