அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொய்யாத நல்லூர் கிராமத்தில் கண்ணையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேல்முருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேல்முருகன் மாலை பில்லாக்குறிச்சியில் வசிக்கும் அமுல்ராஜ் என்பவரின் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு ராயபுரம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனம் சாலையில் உலர்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மக்காசோளம் பயிரில் ஏறியதால் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதனால் பின்னால் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேல்முருகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.