தர்மபுரியில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற இரண்டு லாரிகள் மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது.

இதற்கிடையே இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் காரில் வந்த மூன்று பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தால் சேலம்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 2 மணி நேரம் போக்குவரத்து கடமையாக பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.