தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் முன்னாள் மாணவர் குழு சார்பாக இயற்பியல் துறை பிரிவில் படித்த மாணவர்களுக்கு முன்னாள் சந்திப்பு விழா அதியமான் பேலஸில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1987-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கல்லூரியில் பேராசிரியர்களாக வேலை பார்த்த டாக்டர் சீதாராமன், ஸ்ரீரங்கம் பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு நினைவு பரிசுகள் கொடுத்து கௌரவிக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுடன் படித்த மாணவர்களை சந்தித்ததால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.