கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் தங்கி இருந்து மெத்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குந்தன் குமார் தனது அறையில் இருந்தார். அவருடன் தங்கி இருந்த லாலா குமார் என்பவர் வெளியே சென்று விட்டு அறைக்கு திரும்பி வந்தார். அவர் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் குந்தன் குமார் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த லாலா குமார் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். அப்போது குந்தன்குமார் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குந்தன்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே பீகாரில் இருந்த போது குந்தன் குமார் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவர் தான் தற்கொலை செய்வதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி காதல் விவகாரம் காரணமாக குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.