திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இருசக்கர வாகனத்தில் கானப்பாடி அருகே சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வகுமார் உயிரிழந்தார்.

செல்வகுமாரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் புதுப்பாளையத்தில் அரசு மரியாதையுடன் மாவட்ட ஆட்சியர் பூங்குடி செல்வக்குமாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இதற்கிடையே அறுவை சிகிச்சை மூலம் செல்வகுமாரின் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டது.