ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சனாபுரம் பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் 50 மாணவ மாணவிகள் கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்தனர். மற்றும் நள்ளிரவு நேரம் 50 மாணவ மாணவிகள் மூன்று ஆசிரியர்களுடன் சுற்றுலா பேருந்தில் புறப்பட்டனர். அந்த பேருந்து கோபி என்பவர் ஓட்டி சென்றார்.

இந்நிலையில் பேருந்து புறப்பட்டு 500 மீட்டர் தொலைவு சென்ற நிலையில் ஈரோடு- பெருந்துறை சாலை வளைவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்வேதா என்ற மாணவி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் காயமடைந்த மற்ற மாணவ மாணவிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பிறகு சுற்றுலா பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.