கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கிருஷ்ணகுமார் என்பவர் கடந்த 2022-ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணா குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் நீதிமன்றம் கிருஷ்ணகுமாருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.