ஈரோடு மாவட்டத்திலுள்ள நல்ல கவுண்டன்பாளையத்தில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரகாசம் அவரது உறவினர்களும் தட்டப்பள்ளி வாய்க்கால் கடையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மது போதையில் பிரகாஷ் வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பிரகாஷை காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பிரகாஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.