ஆந்திர மாநிலத்தில் இருந்து மீன் பாரம் ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெத்தாம்பாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரி டிரைவரும், அவருடன் இருந்த மாற்று டிரைவரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.