ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை பெரியார் நகர் வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலதண்டாயுதபாணிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெயிண்டரான பால தண்டாயுதபாணி குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பால தண்டாயுதபாணியின் பெற்றோர், தங்கை ஆகியோர் உடல்நல குறைவு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் யாரிடமும் அதிகமாக பேசாமல் மன உளைச்சலில் இருந்த பாலதண்டாயுதபாணி அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாலதண்டாயுதபாணிக்கு சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தங்கை, பெற்றோர் இறந்த துக்கம் தாங்காமல் அளவுக்கு அதிகமாக மது குடித்து பாலதண்டாயுதபாணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.