தமிழகத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் பயனடைந்து வரும் நிலையில் ஆகஸ்ட் 11ஆம் தேதி அதாவது இன்று விருதுநகர் மாவட்டம் சூலைகரையில் மைக்ரோ வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையம் சார்பாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 9:00 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ என அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இது குறித்து கூடுதல் தகவல்களை அறிய https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/312308090013 என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.