கடலூர் மாவட்டத்தில் உள்ள சௌந்தரசோழபுரம் கிராமத்தில் கலியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கலியனின் மகள் நாகவள்ளி அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் சுபாஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் நாகவள்ளி தனது குடும்பத்தினரிடம் வெளியே சென்று வருகிறேன் என கூறினார்.

அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நாகவள்ளியை தேடி பார்த்தனர். நேற்று காலை சௌந்தரசோழபுரம் மெயின் ரோட்டின் அருகே மோட்டார் கொட்டகை முன்பு இருக்கும் மரத்தில் நாகவள்ளி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது இரண்டு கால்களும் முட்டி போட்ட நிலையில் இருந்தது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகவள்ளியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நாகவள்ளி தற்கொலை செய்து கொண்டாரா? அவரை யாராவது அடித்துக் கொலை செய்து உடலை தூக்கில் தொங்க விட்டு சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.