அரியலூர் மாவட்டத்தில் உள்ள தத்தனூர் கீழவெளி கிராமத்தில் அன்புச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டிலேயே டீக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரேம்ராஜ் என்பவர் டீக்கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

இதனை தட்டிக் கேட்ட அன்புச்செல்வன் மற்றும் அவரது மனைவி கவிதாவை பிரேம் ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரேம் ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.