நாமக்கல் மாவட்டத்திலிருந்து முட்டைகள் ஏற்றிக்கொண்டு ஒருவன் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் பெரியசாமி என்பவர் உடன் இருந்தார் இந்நிலையில் துறையூர்- பெரம்பலூர் சாலையில் செஞ்சேரி புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி வேனில் பின்புறம் மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 90 ஆயிரம் முட்டைகள் உடைந்து நாசமானது. மேலும் முட்டைகள் சாலையில் ஆறாக ஓடி துர்நாற்றம் வீசியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்த விபத்தில் செந்தில்குமார், பெரியசாமி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.