கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுதுறை பகுதியில் பூபேஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மிதுன் என்ற குழந்தை இருக்கிறது. கடந்த 20-ஆம் தேதி கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காயத்ரியின் சாவிற்கு காரணமான அவரது கணவரை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதனையடுத்து வரதட்சணை கொடுமை செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக பூபேஸ் மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் காயத்ரியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.