மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். தன்னை பார்க்க வந்த தாயிடம் இது குறித்து சிறுமி கூறிய நிலையில் தாய் போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வார்டன் மற்றும் மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.