கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அப்படி சில பயணிகள் பேருந்துக்காக காத்திருந்து இரவு நேரத்தில் நடை பாதையில் தூங்குகின்றனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நடைமேடையில் பயணி ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஏற்கனவே தூங்கிக் கொண்டிருந்த பயணியின் அருகே  அமர்ந்து டீ குடித்தார். பின்னர் அங்கேயே தூங்குவது போல நடித்தார். இதனையடுத்து அந்த மர்ம நபர் அந்த பயணியின் சட்டைப் பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து பாதிக்கப்பட்ட பயணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா கட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.