சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பெரியார் நகரில் மூர்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்