சேலம் மாவட்டத்தில் உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்பாளையத்தில் கட்டிட வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சசி பிரியா, அஸ்விதா ஸ்ரீ, மோகனா என்ற மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பாபு தினமும் மது குடித்துவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த நித்யா அரளி விதைகளை அரைத்து மூன்று மகள்களுக்கும் குளிர்பானத்தில் கலந்து கொடுத்துவிட்டார்.

பின்னர் அதனை நித்யாவும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மயங்கி கிடந்த நித்யா மற்றும் அவரது மகள்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.