தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை மணியார்புரம் பகுதியில் வைத்தியநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிரத்தினம் என்ற மகன் உள்ளார். இவரது நண்பர் விஜயராகவன் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிரத்தினம் விஜயராகவன் வேலை பார்க்கும் பூக்கடைக்கு சென்று அவரிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கோபத்தில் விஜயராகவன் அரிவாளை எடுத்து மணிரத்தினத்தின் தலை கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதனால் படுகாயமடைந்த மணிரத்தினத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஜயராகவனை கைது செய்தனர்.