தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் அருகே மேட்டு தெருவில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் டிவி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டுகள் ஆகிறது. விக்னேஷின் மனைவி 6 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று விக்னேஷ் மோட்டார் சைக்கிளில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் அண்டக்குடி அருகே முன்னால் சென்ற சுற்றுலா பேருந்தை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதனால் படுகாயமடைந்த விக்னேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.