தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொன்றைக்காடு மேற்கு பகுதியில் கரிகாலன்- ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அஸ்மிதா(3) என்ற மகள் உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அஸ்மிதாவின் பாட்டி ராஜம்மாள் குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு அருகே இருக்கும் கடைக்கு சென்றார். அப்போது திடீரென வந்த தெரு நாய் ராஜம்மாளின் காலில் கடித்தது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜம்மாளை நாய் கடித்து குதறியது.

மேலும் அஸ்மிதாவின் கையிலும் நாய் பலமாக கடித்தது. அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த திருப்பதி என்பவரையும் நாய் கடித்தது. இதனால் மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.