அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே சீனிவாசன்- ஜெயராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜு என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றியுள்ளார். இதனையடுத்து தனது தாய், தந்தையருக்கு தெரிந்தே வீட்டில் வைத்து சிறுமியை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி கர்ப்பமானார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் சிறுமி மண்ணெண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சீனிவாசனை கைது செய்தனர். தலைமறைவான ராஜூ ஜெயராணி ஆகியோரை தேடி வருகின்றனர்.