தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக பலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊர் கர்நாடக மாநிலம் பெங்களூரு. ரஜினியின் பூர்வீகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி என்ற கிராமம். இந்த கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி ரஜினி தன் அம்மா அப்பாவுக்கு சிலை வைத்துள்ளதோடு கிராம மக்களின் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக குடிநீர் குழாய்கள் அமைத்துள்ளார்.

வேப்பனஹள்ளி கிராமத்திற்கு ரஜினியின் அண்ணன் மட்டும் அடிக்கடி சென்று வரும் நிலையில் ரஜினி ஒரு முறை கூட சென்றது கிடையாது. இதனால் ரஜினியை பார்க்க வேண்டும் என வேப்பனஹள்ளி மக்கள் ஆசைப்படுகிறார்கள். இதன் காரணமாக ரஜினி ஒரு முறையாவது சொந்த ஊருக்கு வந்து உறவினர்களை பார்க்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ரஜினி தன் உறவினர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.