தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த வருடம் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்று முதல் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

படக்குழுவினர் இந்தியா முழுவதும் சென்று ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக தற்போது ஸ்பெஷலாக ஆந்தம் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் பாடியுள்ளார். மேலும் இந்த பாடல் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.