தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர் ரகுமான். இவர் தமிழ் மட்டும் இன்றி பிறமொழி திரைப்படங்களிலும் முன்னணி இயக்குனராக திகழ்கிறார். ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 2-ம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஏ.ஆர் ரகுமான் நேற்று பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆந்தம் பாடலை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது இசை புயல் ஏ.ஆர் ரகுமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நான் இதுவரை கல்லூரிக்கு சென்றதே கிடையாது. தற்போது முதல் முறையாக கல்லூரிக்கு வந்திருக்கிறேன். நீங்கள் தான் நாட்டின் எதிர்காலம். எதிர்கால இந்தியாவாக உருவாக்க போகும் இந்த கூட்டத்தை பார்த்து நான் பயப்படுகிறேன் என்று கூறினார். மேலும் ஏ.ஆர் ரகுமான் பேசியது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.