தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்துள்ள தசரா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் சைரன், மாமன்னன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் சமந்தாவை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் நான் வியந்து பார்க்கும் ஒருவர் சமந்தா. நான் பார்த்ததில் மிகவும் வலிமையான மனம் கொண்ட நபர். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தற்போது நடிகை சமந்தா பகிர்ந்து கீர்த்தி சுரேஷ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.