
பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பெரியாரிஸ்டுகள் எதிர்ப்பு தெரிவித்து அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். அப்போது சீமானின் உருவ பொம்மையை எரித்து கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்து சீமான் கூறியதாவது, அரசியல் அனாதையாகி விடுவேன் என்று பல அனாதைகள் கூறுகின்றனர். 32 இயக்கங்களை சேர்த்து, 300 பேரை திரட்ட முடியவில்லை ஒரு ஆள் 10 பேரை கூட்டிக்கொண்டு வந்தாலே பெரிய எண்ணிக்கை ஆகியிருக்கும். பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அப்படி இருக்கும் நிலையில், என்னை எங்கே அப்புறப்படுத்த போறீங்க. கால், அரை வீட்டிற்கு கைக்கட்டி நிற்கும் நீங்கள் என்னை கேட்கிறீர்கள்.
234 இடமும் என்னிடம், நாடு என் நாடு, துணிவு, திமிறு ஏதாவது இருக்கா. உண்மையான கம்யூனிசம் என்னிடம் தான் இருக்கிறது. முற்போக்கு சீர்திருத்தம் சமூக நீதிப் பெண்ணுரிமை எல்லாம் பிரபாகரன் பிள்ளைகளிடம் உள்ளது சும்மா வெட்டிப் பேச்சு, வெற்றி பேச்சு, வெறும் கூச்சல். சமூக நீதி என்று பேசும் உங்களுக்கு ஜமுக்காளம் நீதி கூட கிடையாது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த துணிவு இருக்கா? சட்டநாதன் அறிக்கை எங்கே உள்ளது? எந்த குப்பையில் போட்டீங்க. பெரியார் கூறித்து பேசியதற்கு தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அங்கே என்னை நிறுத்தும் போது ஆதாரங்களை காட்டுகிறேன்.
நான் மக்களிடம் இவ்வளவு கேட்டுள்ளேன், இதற்கு ஆதாரம் கேட்டீர்களா? ஆயிரம் குற்றச்சாட்டு இருக்கிறது இதற்கெல்லாம் கேட்காமல் அதற்கு மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என் வீட்டை முற்றுகையிட வரவில்லை பக்கத்தில் இருந்த முடி திருத்தகம் கடையை முற்றுகையிட்டார்கள். தமிழனின் மரபு கோட்டையை முற்றுகையிடுதல், திராவிடம் மரபு வீட்டை முற்றுகையிடுவது. பொம்மையைத்தான் எரிக்க முடியும், அதில் எனக்கு பெருமை தான், போராடி என்னை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்து விட்டதான் போவார்கள். நான் 20% உழைத்தால் போதும். என்னை ஆதரித்து வேலை செய்கிறார்கள் என்பது தெரியாமல் திமுக அரசு காசு கொடுத்து ஊக்கவிக்கின்றது. இப்போது யார் இந்த சீமான் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று கூறினார்.