ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய  முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு இந்த பத்திரிகையை வெளியிகின்ற போது அவர்களாகவே… தாமாகவே… முன்வந்து, ஆண்டு சந்தா, இரண்டாண்டு சந்தா, மாத சந்தா தருகின்ற நிகழ்வை குறிப்பிட்டு,  மொய் விருந்தாக இந்த நிகழ்வு நடைபெற்றது என்று சொன்னார்கள்.

தென் மாவட்டங்களில் இந்த மொய் விருந்து பிரசிதிபெற்றது. ஒரு விருந்தினரிடம் மொய் வாங்கினால், மேற்கொண்டு அதை அவருக்கு திருப்பி தருகின்ற பொழுது கூடுதலாக பணம் போட்டு திருப்பி தர வேண்டும். இல்லையென்றால் வீட்டுக்கு ஆள் அனுப்பிடுவார்கள். நான் உங்கள் நிகழ்ச்சிக்கு வந்து பத்தாயிரம் செய்தேன். இன்னும் வரவில்லை எங்களுக்கு அப்படினு.. அடுத்தநாள் காலையில ஓலை போகும்… பணத்தை கட்டிட்டு வருவாரு.

இப்பொழுது நீங்கள் அந்த ஆண்டு சந்தா, மாத சந்தாவை பத்திரிகைக்காக.. உங்களுடைய பங்களிப்பை தந்திருக்கிறீர்கள். ஆகவே நீங்களும் இந்த”புரட்சித் தொண்டன்”  பத்திரிக்கையில் ஒரு பங்காளியாகவே இருக்கிறீர்கள் என்பதை நான் பணிவோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். ஆக பங்காளிகளிடம் இருந்து பெறப்பற்ற இந்த சந்தா தொகை… உங்களுக்காக இன்று மட்டும் அல்ல. என்றுமே பணியாற்றும் இந்த நாளிதழ் என்பதனை நான் இங்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது என தெரிவித்தார்.