தமிழகத்தில் ஜாதி பிரிவினை பார்க்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் யாரும் ஜாதி பார்க்கக் கூடாது, ஆசிரியர்கள் ஜாதி பிரிவினையை தூண்டும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் பள்ளியில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்படுவார்கள். அதையும் மீறி பாகுபாடு காட்டினால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.