உயிரியல் பூங்காவில் அரிய வகை வெள்ளை முதலைகள் தற்போது அதிகரித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சமீப காலமாக அரியவகை வெள்ளை முதலை இனங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 1975-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள முதலைகளை பாதுகாப்பதற்கு சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த சமயத்தில் 2 வெள்ளை முதலைகள் மட்டுமே இருந்தது. இந்த வெள்ளை முதலை இனங்கள் படிப்படியாக அதிகரித்து கடந்த வருடம் 16 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நடபாண்டின் தொடக்கத்தில் இருந்தே வெள்ளை முதலை இனங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது வெள்ளை முதலை இனங்கள் 20 ஆக இருக்கிறது.