நம் மண்ணில் நடப்பதால் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அனைத்து அணிகளும் சவால் நிறைந்தவையாக உள்ளன என்றும் நடராஜன் பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் இடம் பெறாதது எனக்கு வருத்தமாக உள்ளது என்றும் நடராஜன் கருத்து கூறி உள்ளார்.