கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றின் கரை காலனியில் கணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வகுமாரி தனது மாமனார், மாமியார், கணவர், குழந்தைகளுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். குடும்பத்தில் அடிக்கடி சிறு, சிறு பிரச்சனைகள் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த செல்வகுமாரி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.