மதுரை மாவட்டத்திலுள்ள வாடிகோவில்பட்டி கிராமத்தில் அருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜீவிதா தனது குழந்தையை விட்டுவிட்டு கோபத்தில் தாய் வீட்டிற்கு சென்றார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அருண் குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அருணையும் குழந்தையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.