நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதனால் மன உளைச்சலில் இருந்த நித்தியா சேலம் மாவட்டத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வநித்யா சாணி பவுடரை கரைத்துக் குடித்து மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நித்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.