சேலம் மாவட்டத்தில் உள்ள அரசரமணி முத்தாயிகாடு பகுதியில் பூபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேஷ் என்ற மகன் இருக்கிறார். அவரது நண்பர் சேட்டும் அப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் குடித்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த சேட்டு கத்தியால் மாதேஷின் கழுத்து, முகம் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த மாதேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.