ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ரகுநாதபுரம் கீழ்வலசை பகுதியில் தெய்வ சிலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைதிலி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காலை கண்விழித்தும் மைதிலி பல் துலக்க சென்றார். அப்போது டூத் பேஸ்ட் என நினைத்து எலி பேஸ்ட்டை வைத்து பல் துலக்கினார். இதனால் லேசான மயக்கம் ஏற்பட்டது.

உடனே மைதிலி நெல்லையில் இருக்கும் மகள் வீட்டிற்கு சென்றார். அங்கு உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டதால் மைதிலி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மைதிலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.