சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் மருத்துவமனைகளில் உருவாகும் கழிவுகளை அங்கேயே தரம் பிடித்து மக்கும் மற்றும் அக்காத கழிவுகளை மாநகராட்சி பணியாளர்களிடமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு காரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் கொடுக்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் சில தனியார் மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை மற்ற கழிவுகளுடன் சேர்த்து பொது இடங்களில் கொட்டுவதாக புகார்கள் வந்தது.

அதன் அடிப்படையில் குரங்குசாவடி பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் மருத்துவக் கழிவுகளை சேகரிக்க நியமிக்கப்பட்டுள்ள நிறுவனத்திடம் முறையாக ஒப்படைக்காமல் பொது இடங்களில் கொட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த தனியார் மருத்துவமனைக்கு மாநகராட்சி அதிகாரிகள் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.