கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி திருவதிகை ஹவுஸிங் போர்டு குடியிருப்பில் ராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான அஸ்வினி என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஆனந்தபாபு என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு ஆனந்தபாபுவின் குடும்பத்தினர் அஸ்வினியை சித்திரவதை செய்துள்ளனர். இதனால் அஸ்வினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

சம்பவம் நடைபெற்ற அன்று ஆனந்தபாபு, அவரது தந்தை பரமானந்தம், தாய் மீனா ஆகியோர் அஸ்வினியின் வீட்டிற்கு சென்று வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த அஸ்வினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆனந்தபாபு உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.