கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகராஜபுரம் கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். தற்போது ஏழுமலை சவுதி அரேபியாவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று காயத்ரி பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆராயி, அவரது மகன் முருகன் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஆராயி வீட்டில் இருந்து சிலிண்டர் கசிந்து நாற்றம் வீசியது.

இதனை பார்த்து காயத்ரி உள்ளே சென்று செல்போன் டார்ச் மூலம் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளதா என பார்த்து ரெகுலேட்டரை ஆஃப் செய்தார். அதே சமயம் பயங்கர சட்டத்துடன் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அலறி துடித்த காயத்ரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காயத்ரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.