கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அசோக்குக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது.

இதனை அறிந்த கோகிலா தனது கணவரை கண்டித்தார். இதில் கோபமடைந்த அசோக் தனது மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த கோகிலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.