கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ஆபத்தானபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சந்திரமோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்திரமோகன் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக தனது காரில் வடலூர் பேருந்து நிலையத்திற்கு சென்றார். அவர்களை பேருந்தில் ஏற்றிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வடலூர் நான்கு மணி சந்திப்பு அருகே சென்றபோது எதிரே வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சந்திரமோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.