ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் கரையில் பாசனம் மற்றும் தண்ணீர் செல்லும் பாதை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அகற்றுமாறு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி பொதுப்பணித்துறையினர் சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு வீட்டை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் காலக்கெடு முடிந்தும் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடித்து அகற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.