கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மத்தூர் கொத்தகோட்டை கிராமத்தில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் கோவிந்தன் பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் கோவிந்தன் கற்கள் வாங்குவதற்காக சமத்துவபுரத்திற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கோவிந்தனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.