கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மதுபான விதிகள் 2003-12-வது விதியின்படி நபிகள் நாயகம் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி (நாளை) ஒவ்வொரு ஆண்டும் மதுபானம் விற்பனை இல்லாத தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள், உரிமம் பெற்று மது விற்பனை செய்யும் நிலையங்கள் அனைத்தும் நாளை திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி மதுக்கடைகளை திறந்து மது விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.