கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேகமண்டபம் சாமிவிளை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேவதாஸ் கொல்லிக்கோட்டுவிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று முன்தினம் தான் தனியாக குடியிருக்கும் வீட்டில் தேவதாஸ் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.