பிரபல நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். சமந்தா மற்றும் நாக சைதன்யா எதற்காக விவாகரத்து பெற்றார்கள் என்ற காரணம் இதுவரை தெரியாமல் இருந்த நிலையில் தற்போது முதன்முறையாக விவாகரத்துக்கான காரணத்தை ஒரு பேட்டியில் நாக சைதன்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் சமந்தா எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் பிரிந்து  இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. சட்டப்படி விவாகரத்து பெற்று ஒரு வருடம் ஆகிறது. சமந்தா மிகவும் நல்ல பெண். சமூக வலைதளங்களில் வந்த போலி செய்திகள் தான் எங்களுடைய பிரிவுக்கு காரணம்.

முதலில் போலி செய்திகள் பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதுவே பிறகு பெரிய பிரச்சினையாக மாறி எங்கள் பிரிவுக்கு வழி வகுத்து விட்டது. நாங்கள் பிரிந்து விட்டாலும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருக்கிறோம். ஆனால் சில ஊடகங்கள் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைக்கவில்லை என தவறாக சித்தரித்து செய்திகள் வெளியிடுகிறார்கள். எங்களின் கடந்த காலத்தில் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத மூன்றாவது நபரை இதற்குள் இழுத்து அவமரியாதை செய்தனர். இது மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. என்ன நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்கிறேன். மேலும் இப்போது நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.