
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கிளம்பாக்கம் பஸ் நிலையத்தில் உதயசூரியன் சின்னம் வேண்டி கிடக்கு. தம்பி உதயநிதி கேக்குறாரு உங்க அப்பன் வீட்டுக்கு காசா?ன்னு…. இதுல நான் கேட்கிறேன், இது உங்க அப்பன் வீட்டு காசா ? உங்க தாத்தா வீட்டுக் காசா ? எதுக்கு உங்க தாத்தா பெயரை வைக்குற…. எதுக்கு வைக்கிற ? இந்த நாட்டுல கருணாநிதியை விட்டால், வேற தலைவரே கிடையாதா ? எங்களுக்கு யாருமே கிடையாதா ? எழுதுனா அவர்தான் எழுதினார், அதுக்கு ஒரு பேனா வைக்கணும்.
மருத்துவமனைக்கு முத்துலட்சுமி ரெட்டி பெயர் வைக்க முடியாதா ? முதல் முதலாக படிச்சு மருத்துவரான பெண்மணி பெயர் வைக்க கூடாதா ? நூலகத்துக்கு என் தாத்தா பாண்டிதுரை தேவர் பெயர் வைக்க கூடாதா ? நாலாம் தமிழ் சங்கம் அமைச்சு, தமிழ் வளர்த்தவன் பெயரை வைக்க கூடாதா ? ஜல்லிக்கட்டுக்கு நான் கேலரி கேட்டேனா…. ஜல்லிக்கட்டு வரும்போது ஒரு கட்டையை கட்டி, ஓட விட்டுட்டுட்டு கழட்டிட்டு போயிருவோம்.
அதுக்கு எதுக்கு அவ்வளவு கோடியில் செலவு ? அந்த கட்டடமா ? அதுக்கும் உங்க அப்பா பெயரா ? என்ன இது…. எதுக்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்துக்கொண்டு, தூக்கிட்டு…. கருணாநிதி நாடு கேட்டேன் என்றால், செருப்பு கழட்டி அடி. வச்சிட்டு போ…. 400 கோடி செலவு செஞ்சீங்க. அந்த மதில் சுவரை எதுக்கு இடிக்கிறீங்க ? உதயசூரியன் சின்னம் எதுக்கு ? அதிமுக முடிச்சிருந்தா, ஏன் ரெட்டை இலை சின்னம் வைக்கணுமா ? உங்க காசா உங்க கட்சி காசா ?
ஏன் காசு, மக்களோட வரி காசு… அதுல என்ன உன் கட்சி சின்னத்தை வைக்கிறது ? 40 கிலோ மீட்டருக்கு அங்கு போய் எதற்கு பேருந்து நிலையம் ? நான் சென்னைக்கு வரதுக்கு முன்னாடி 40 கிலோமீட்டருக்கு அங்கே புறநகரில் நிறுத்திவிடுகின்றாய். பிறகு அங்கே இருந்து 40 கிலோமீட்டர் எப்படி வருவது ? இதெல்லாம் எதுக்கு ? மாநகர பேருந்து… இவ்வளவு தொலைநோக்கு இருக்கிறவன், நீர் எங்க தேங்கும் ? நீர் தேக்கத்தை ஆக்கிரமிக்கலாமா ?
நீர் தேக்கத்தை குப்பை மேடாக ஆக்கலாமான்னு தெரியல ? பள்ளிக்கரணை ஏறில குப்பை கொட்டன்னு அதீமேதை யாரு ? அந்த அதீமேதை யாரு? இந்த இரண்டு ஆட்சியில் எவன் கொட்டினான்? கடல் நீர் மட்டத்துக்கு சரியா இருக்கிற ஒரு இயற்கையின் அருங்கொடை பள்ளிக்கரணை ஏறி. அதுல குப்பைமேடு ஆக்குற அறிவு உனக்கு யார் கொடுத்தது ? இதுதான் தொலைநோக்கா ? 5000 ஏக்கர்ல ஏர்போர்ட், அது எதிர்காலத்துக்கு….. அவ்வளவு எதிர்காலத்தை சிந்திக்கிறவுங்களா இவுங்க என விமர்சனம் செய்தார்.